மேலதிக அரச அதிபருக்கு கொரோனா!- யாழ். செயலகத்தின் இரு பிரிவுகள் மூடப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரச அதிபர் பிரதீபனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்டச் செயலகத்தின் இரு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.

அங்கு பணியாற்றுவோரிடமிருந்து பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. மூடப்பட்ட பிரிவுகளில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

தற்போது பெறப்பட்டுள்ள மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!