கிழக்கு ஆளுநர் அனுராதாவுக்கு கொரோனா!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதனை அவர் நேற்று ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். திருகோணமலை அரச அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பிறகு, அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கிடைத்துள்ளதையடுத்து தொற்று உறுதியானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய தனது இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக அவருடன் நெருக்கமான தொடர்பைப் பேணியவர்கள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!