முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை எந்ததொரு நிகழ்வும் நடத்தக்கூடாது, மக்கள் ஒன்றுக்கூடக் கூடாது, பொது இடங்களில் நினைவுக் கூர கூடாது என தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!