நாட்டில் மேலும் 36 கொரோனா மரணங்கள்

நேற்றைய தினம் (19) 36 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,051 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

ஹொரணை (இருவர்), எம்பிலிபிட்டிய, நாவலப்பிட்டி, புசல்லாவை, மாத்தளை (இருவர்) வென்னொருவ, பன்னல, இரத்மலானை, இராஜகிரிய, வத்தளை, கலபிட்டமட, துல்கிரிய, அஹங்கம, ஊரபொல, கட்டுவ, செவனகல, தெலிகம, எஹலியகொடை, நிக்கபொத்த, பண்டாரகம, பேராதனை (இருவர்), பலபிட்டிய, இங்கிரிய, குன்னாபான, கிங்தொட்ட, இமதூவ, தல்பே வடக்கு, ரத்கம, தல்கஸ்வல, எல்பிட்டிய, பயாகல, வஸ்கடுவ மற்றும் ஹேனகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 36 பேர் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!