கர்ப்பிணி தாய்மார்களை சேவைக்கு அழைக்க வேண்டாமென வேண்டுகோள்

தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை சேவைக்கு அழைக்க வேண்டாமென தொழில் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச நிர்வாக அமைச்சினால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு இந்த ஆலோசனையை வழங்குவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே நிலவும் கொரோனா தொற்று நிலைமையின் கீழ், அரச துறைகளில் பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை சேவைக்கு அழைக்காதிருக்குமாறு இதற்கு முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!