உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானது – 21 பேர் வைத்தியசாலையில்

நுவரெலியா – இராகலை – நடுக்கனக்கு பகுதியில் உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இராகலை ஸ்டாபோட் பிரிவிலுள்ள 42 தொழிலாளர்களை சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டிக்சன்கோனார் பகுதிக்கு கடமைக்கு ஏற்றிச்சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!