கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழுமையான விபரங்கள்

நாட்டில் நேற்றைய தினம் 3,538 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 158,322 ஆக அதிகரித்துள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 1,828 பேர் முழுமையாக குணமடைந்ததை தொடர்ந்து இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 125,360 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,089 ஆக பதிவாகியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!