கொவிட் 19 தொற்றாளர்களை 15 – 30 நிமிடங்களுக்குள் அனுமதிக்க வேண்டும்

வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் கொரோனா தொற்றாளர்கள் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் ஊடாக சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களை இயலுமானவரை வைத்தியசாலைகள் அல்லது இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வது சிறந்ததாகும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

இதேவேளை சிகிச்சை நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பிரதிப் பணிப்பளார் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் சிகிச்சைவழங்குவது 100 சதவீதம் வெற்றியளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!