யாழ்ப்பாணத் தொலைக்காட்சியில் 14 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாண நகரில் இயங்கும் கப்பிட்டல் தொலைக்காட்சியில் 14 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண்ணொருவரும், ஆணொருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 3 கட்டங்களாக பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது.

இறுதியாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். மொத்தம் 14 ஊழியர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இறுதியாக அடையாளம் காணப்பட்ட 9 தொற்றாளர்களும், சிகிச்சை நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!