வடக்கை கண்காணிக்க 5 மருத்துவர்கள் நியமனம்!

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான தகவல்களைத் திரட்டவும் ,அவற்றை ஒருங்கிணைக்கவும் வடக்கு மாகாணத்துக்குச் சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட 5 மருத்துவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

இலங்கையில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கோவிட் தொற்றாளர்கள் அதனுடன் தொடர்புடைய ஏனைய விவரங்கள் உரியவாறு சேகரிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், சுகாதார அமைச்சு நாடு முழுவதிலும் இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்களை நியமித்துள்ளது.

வடக்கின் 5 மாவட்டங்களுக்கு ஒவ்வொருவரும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு ஒருவருமாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுகாதார அமைச்சுடன் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ள வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் 5 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!