திருகோணமலையில் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்!

திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லையென திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் கமல் தெரிவித்தார்.

அதே இடத்தைச் சேர்ந்த சஞ்சீவன் (21) ஜீவரெட்ணம், சரன்ராஜ்(34) ,சிவசுப்ரமணியம் நதுசன்(21) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் திருக்கடலூர் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்றுள்ள நிலையில் ,அவர்கள் மூவரும் கரை திரும்பவில்லையெனவும், மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இம்மீனவர்களை தேடும் பணியில் பத்திற்கும் மேற்பட்ட படகுகளை அனுப்பி வைத்துள்ளதாகவும், திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை ,இலங்கை கடற்படையினருக்கும், மீன்பிடி திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!