கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலில் இருந்து கொட்டப்பட்ட பொருட்களை சேகரித்தமை தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் லொறியொன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார
கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலில் இருந்து கொள்கலன்கள் வெடிப்புக்குள்ளானதில் ரசாயனம் உள்ளிட்ட பொருட்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இவ்வாறு கொட்டப்பட்ட பொருட்களை கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் சேகரித்துள்ளமை கண்டறியப்பட்டது.
இந்த நிலையிலேயே குறித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!