காத்தான்குடி பொலிஸ் நிலையம் மூடப்பட்டது! – 32 பொலிசாருக்கு கொரோனா.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெரும் குற்றப் பிரிவு மற்றும் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்று நீக்கிய பின்னர் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!