தனியார் நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை வாங்க வேண்டாம்!

(FILES) This file illustration picture taken in Paris on November 23, 2020 shows a syringe and a bottle reading “Covid-19 Vaccine” next to AstraZeneca company and University of Oxford logos. – The Covid-19 vaccine developed by the British drugs group AstraZeneca and the University of Oxford has achieved a “winning formula” for efficacy, the company’s chief executive said on Sunday, December 27. (Photo by JOEL SAGET / AFP)
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்ய வேண்டாம் என அஸ்டிராஜெனேகா நிறுவனம், இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளது.தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தடுப்பூசிகள் போலியானவையாகயிருக்கலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனியார் தடுப்பூசிகளை விற்பனை செய்யமுன்வந்தால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டு உடனடியாக உரிய தரப்பிற்கு என அஸ்டிரா ஜெனேகா தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களிற்கு எந்த விநியோகத்தையும் மேற்கொள்ளவில்லை அவர்கள் விற்பனை செய்வதற்கான அனுமதியை விநியோகிப்பதற்கான வழங்கவில்லை என தெரிவித்துள்ள அஸ்டிரா ஜெனேகாவின் ஆசியாவிற்கான பொறுப்பதிகாரி ஜஸ்பெர் மெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனியார் வழங்க முன்வரும் தடுப்பூசிகள் போலியானவையாக காணப்படலாம் என தெரிவித்துள்ள அவர் ஆகவே இவற்றை நிராகரித்துவிட்டு உரிய தரப்பிற்கு அறிவிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்கும் சகாக்களாக கொவக்ஸ், யுனிசெவ், மற்றும் சீரம் நிறுவகங்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்