நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

எரிபொருள் மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில், நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டு வருகின்ற நிலையில், நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற பிரவேசம், தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையிலேய, எதிர்க் கட்சியினர் இவ்வாறு கோஷங்களை எழுப்பி வருவதாக, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இதன்போது குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!