கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்படும்

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் கடக்கும் வரையிலும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் திரிபுகளின் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 55 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சாதாரண நிலையில் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் உயிரிழப்புகள் பதிவாகும் நிலையே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக அளவிலான கொரோனா உயிரிழப்புகள் பதிவாகும் நிலை இரண்டு வாரத்தில் குறைவடையும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!