கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 862ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் ஆயிரத்து 239 பேருக்கு இன்றைய நாளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 49 ஆயிரத்து 289 ஆக காணப்படுகின்றது.
கொரோளா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆயிரத்து 843பேர் முழுமையாகமாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 31 ஆயிரத்து 807 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!