கறுத்தப்பாலத்தில் கவிழ்ந்தது ட்ரக்! – 2 இராணுவத்தினர் பலி!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி கறுத்த பாலத்தில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கரடியனாறில் இருந்து செங்கலடியை நோக்கிப் பயணித்த குறித்த இராணுவ வாகனம், கறுப்பு பாலம் அருகில் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த நால்வரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!