பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயுவின் அதிகரிக்கப்படுமா?

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலையை அதிகரிக்க இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தைப்படுத்தல், கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது விற்பனை செய்யப்படும் விலைகளிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, சில நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!