கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மாவட்டம் கொலன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட Sanhindasewana குடியிருப்பு தொகுதி தவிர்ந்த சிங்ஹபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட Galboralla 100 ஆவது தோட்டம் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!