ஜேவிபியினர் தீப்பந்த போராட்டம்!

எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினர் தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தில் 50க்கும் அதிகமான கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாறையின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பலரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை கண்டித்தும், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கோஷத்துடன் குரல் எழுப்பியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!