மூத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக இராணுவ விசாரணை!

ஹபரணவில் மூத்த இராணுவஅதிகாரி ஒருவருக்கும், வனவிலங்கு அதிகாரிகள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில் இராணுவ விசாரணை குழு குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை பதிவாகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு விசாரணை குழு நியமிக்கப்பட்டதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து சரிபார்க்கும் பொருட்டு இரண்டு மூத்த மேஜர் ஜெனரல்கள் தலைமையிலான விசாரணை குழுவை நியமிக்க பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா உத்தரவிட்டார்.

விசாரணை குழு மேலதிக விவரங்களையும் ஆதாரங்களையும் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விசாரணைகளின் முடிவில் அறிக்கைகளை இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்க எதிர்பார்க்கப்படுகிறது என்று இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!