எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவுள்ளதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்காக அலரி மாளிகை தயார்படுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பசில் ராஜபக்ஷவுக்காக அலரி மாளிகையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷ எதிர்வரும் வாரம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
அவருக்கு பொருளாதாரம் தொடர்பிலான அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!