காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான விபரங்கள்

மேல் சப்ரகமுவ வடமேல் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மாகாணங்கள் உட்பட காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று 75 மில்லிமீற்ற மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டின் 7 மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்த மழைவீழ்ச்சிக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கம்பஹா களுத்துறை ரத்தினபுரி காலி மாத்தறை கேகாலை ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட சில பகுதிகளுக்க இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று இரவு 8 மணிவரையான 24 மணித்தியால காலப்பகுதிக்குள் களுத்துறை மாவட்டத்தின் மத்தும பகுதியில் 156 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!