சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்

அம்பாறை, கேகாலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் 03 கிராம சேவகர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் அமுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பொலிஸ் அதிகாரப்பிரிவிற்குட்பட்ட செம்மலை கிழக்கு, நாயாறு மீனவ பகுதி, கேகாலை மாவட்டத்தின், கேகாலை பொலிஸ் அதிகாரப்பிரிவிற்குட்பட்ட, மிஹிபிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின், மாதெயியாவ, ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் அதிகாரப்பிரிவின், மருதமுனை 3 ஆகிய பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!