உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கான திகதி நிர்ணயம்

எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைரயை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற செயற்குழு கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!