சகோதரிகளை கொடூரமாக தாக்கிய குடும்பத்தார்: அதிர்ச்சி காரணம்!

உறவினர்களுடன் மொபைலில் பேசியதற்காக இரண்டு பெண்களை கொடூரமாக தாக்கிய, தாயார், சகோதரர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.ம.பி., மாநிலம் பிபல்வா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் உறவினர்களான இரண்டு பழங்குடியின இளம்பெண்கள், தங்களது உறவினர்களுடன் மொபைல்போனில் பேசியுள்ளனர்.

இதனால், கோபமடைந்த ஒரு பெண்ணின் தாயார், சகோதரர் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து , அங்கிருந்த அற்றங்கரையோரம், அப்பெண்களை கடுமையாக தாக்கினர். அவர்களுடன் தப்பித்து ஓட முயன்ற போதும், கீழே தள்ளிவிட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

குச்சியை வைத்து கடுமையாக அடித்ததுடன், கைகளாலும் அறைந்தனர். தலைமுடியை பிடித்து இழுத்து சென்றதுடன், செருப்பாலும் பெண்ணின் தாயார் அடித்துள்ளார். கால் மூலமும் உதைத்தனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் 22ம் தேதி நடந்துள்ளது. இதனை அங்கிருந்த சிலர், தங்களது மொபைலில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

வலியால், அப்பெண்கள் அலறி துடித்த போதும், ஒருவர் கூட, உதவ முன்வரவில்லை.இந்த வீடியோ போலீசாரின் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், ஒரு பெண்ணின் தாயார், சகோதரர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!