கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைட்டி நாட்டின் அதிபர் ஜொவினஸ் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் அறிவித்துள்ளார். ஹைட்டி நாட்டின் தலைநகரம் போர்ட்-ஓ-பிரின்ஸ் மேலே உள்ள மலைகளில் உள்ள அவரது வீட்டில் கமாண்டோக்கள் குழுவினரால் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என இடைக்கால் பிரதமர் அறிக்யைில் குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவு 1 மணிக்கு இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஹைட்டி முதல் பெண்மணி Martine Marie Etienne Joseph மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தான் இப்போது நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!