மேல் மாகாணத்தில் இன்று முதல் மேலும் 103 ரயில்கள் சேவையில்!

மேல் மாகாணத்தில் இன்று முதல் மேலும் 103 ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பயண நேரங்களை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க முடியும் என ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதான ரயில் மார்க்கத்தில் 36 ரயில்களும் , கரையோர மார்க்கத்தில் 42 ரயில்களும் , களனி மார்க்கத்தில் 10 ரயில்களும் , சிலாபம் மார்க்கத்தில் 15 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ரயில் நிலையத்தில் பிரயாணிகள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைபிடிக்குமாறு ரயில்வே திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துளளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!