express pearl கப்பல் தீவிபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு

express pearl கப்பல் தீவிபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

கப்பல் விபத்து காரணமாக மீனவர்கள் எதிர்நோக்கிய மொத்த இழப்பீட்டுத் தொகைக்கு முன்னர் அரசாங்கம் கோரிய இடைக்கால இழப்பீடு இவ்வாறு வழங்கப்படஉள்ளது.

அதன்படி, 16, ஆயிரம் மீனவர்களுக்கு 420 மில்லியன் ரூபாய் நிதி விநியோகிக்கப்படவுள்ளதாக கடத்தொழில் இராஜங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த பணத்தொகை வங்கிகளினால் மாத்திரமே வழங்கப்படும் எனவும் காசோலைகளால் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வாரத்திற்குள் குறித்த பணத்தொகை வங்கியில் வரவு வைக்கப்படும் எனவும், பணத்தொகை கிடைக்க பெறாதவர்கள் அடுத்த வாரம் இது தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!