அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய் கசிவு!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துறைமுகத்திற்கு வந்திருந்த வணிகக் கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் போது கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடலின் பெரிய பரப்பளவில் எண்ணெய் கசிவை காண முடிவதாகவும் கசிந்த எண்ணெயை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை போர்ட் சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரவி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!