வல்வெட்டித்துறையில் இரண்டு நாட்களில் 48 பேருக்கு தொற்று!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இரண்டு நாட்களில் 39 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எழுமாற்றாக 156 பேரிடம் நேற்று பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் 32 பேரிடம் நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிகோயிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சென்று பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்று முன்தினம் இதேபகுதியில் 9 பேருக்குத் தொற்றுள்ளமை பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!