யாழ்ப்பாணத்தின் நிலைமை தலைகீழாக மாறி விட்டது! – சம்பந்தன்

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த ஒரு வாரத்­தில் மூன்று கொடூ­ரச் சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளன. போர் இடம்­பெற்ற காலத்­தி­லும் எமது இனம் பாதிக்­கப்­பட்­டது. போரில்­லாத காலத் தி­லும் எமது இனம் திட்­ட­மிட்டு பாதிக்­கச் செய்­யப்­ப­டு­கின்­றது. இதற்கு நாம் தான் முடிவு கட்­ட­வேண்டும் என்று தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

‘ கல்வி கலா­சார பண்­பா­டு­க­ளுக்கு யாழ்ப்­பா­ணம் ஒரு காலத்­தில் பெயர்­போ­யி­ருந்­தது. ஆனால் இன்று தலை­கீ­ழாக நிலமை மாறிப்­போய் விட்­டது. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­க­ளின் அட்­ட­கா­சம் ஒரு­பு­றம். போதைப் பொருள் பாவ­னை­யின் உச்­சம் மறு­பு­றம். கொள்­ளை­யர்­க­ளின் அட்­டூ­ழி­யங்­கள் இன்­னொ­ரு­பு­றம். காமு­கர்­க­ளின் கொலை­வெ­றித்­த­னங்­கள் மற்­றொ­ரு­பு­றம் என்று வார்த்­தை­க­ளால் சொல்ல முடி­யாத அள­வுக்கு யாழ்ப்­பா­ணத்­தின் நிலமை வந்­துள்­ளது. இது திட்­ட­மிட்டு கொண்­டு­வ­ரப்­பட்­டது. ­

ஒரு வாரத்­துக்­குள் மூன்று கொடூ­ரச் சம்­ப­வங்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் மாத்­தி­ரம் இடம்­பெற்­றுள்­ளது. ஒரு பள்­ளிச் சிறுமி பாட­சா­லைச் சீரு­டை­யு­டன் கொடூ­ர­மா­கக் கொலை செய்­யப்­பட்டு கிணற்­றி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்­டி­ருக்­கின்­றாள். ஒரு பெண் வெட்­டிக் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார். இன்­னொரு குடும்­பப் பெண் கொள்­ளை­யர்­க­ளி­னால் மிரு­கத்­த­ன­மான வன்­பு­ணர்வு செய்­யப்­பட்டு சீர­ழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்.

இந்­தக் கொடூ­ர­மான கலா­சா­ரம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டும். சட்­டம் ஒழுங்கு குடா­நாட்­டில் நிலை­நாட்­டப்­பட வேண்­டும். மிரு­கத்­த­ன­மான இந்­தச் செயல்­க­ளுக்கு முடி­வு­கட்ட கட்சி பேத­மின்றி அனை­வ­ரும் ஓர­ணி­யில் திர­ள­வேண்­டும் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!