பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் அவதானம்

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க, அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக

வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்பினர் மற்றும் அரச சார்பற்ற செயற்பாட்டாளர்களுடன் வெளி விவகார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில், சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையான பிழையான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள மனித உரிமைகள் மற்றும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து உரையாடுவதில், இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயற்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!