ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட திருத்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது – சபாநாயகர்

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட திருத்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 10 மணியளவில் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனை தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ரணில் விக்ரம மேற்கொண்ட திருத்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம், இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!