நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம்!

நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிர்களை பலியெடுத்து இந்த நாடு உலகப்பந்திலே ஒரு பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும் மிக மோசமான நாடு என்ற செய்தியை உலகம் முழுவதும் சொல்வதற்கு காரணமாகியுள்ளது. இந்த சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்,

அத்தோடு, குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் கையளிக்கப்பட்ட- பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 60 பேரின் விபரங்கள் அடங்கிய பட்டியலையும் அவர் சமர்ப்பித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!