நாட்டில் மேலும் 2 மாவட்டங்களின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் தளர்வு

நாட்டில் மேலும் இரண்டு மாவட்டங்களின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

கண்டி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் இன்று காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

இதன்படி கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிவல கிராம உத்தியோகத்தர் பிரிவின் சாகரதெனிய கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலி;ல இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!