வடக்கு மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக பணிபுரிந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

குறித்த வெற்றிடத்திற்கு, வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, இலங்கையின் 9 ஆவது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!