ஜனாதிபதியின் தந்தையே வந்தாலும் ஒன்றும் நடக்காது – ஹிருணிகா!

அடுத்துவரும் தேர்தல்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவோ, பசில் ராஜபக்ஷவோ மாத்திரமல்ல, அவரது தந்தை டி.ஏ.ராஜபக்ஷ வந்தாலும் கூட, தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வை இல்லாமல் செய்ய முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்திருக்கின்றார்.

துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் விளைவாக நீதிமன்ற தீர்ப்பு முற்றிலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியதிலிருந்து நாட்டிலுள்ள பெண்களும் சிறுவர்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!