ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் நேற்று செலுத்தப்பட்டது – கெஹெலிய

வெளிநாட்டு கடனாக அரசு செலுத்த வேண்டி இருந்த ஒரு பில்லியன் டொலர் பணத்தை நேற்று செலுத்த முடிந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், நேற்று செலுத்த வேண்டியதாக இருந்த வெளிநாட்டு கடனை உரிய நேரத்தில் செலுத்த முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கடனை செலுத்தியதன் மூலம் 2021 ஆம் ஆண்டு அரசு செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன் திரும்ப செலுத்தப்பட்டு விட்டதாகவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!