நாட்டு மக்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்

நாட்டில் கோவிட் தொற்றானது தீவிர நிலையை அடைந்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.

அதன்படி கோவிட் தொற்றிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், டிக்கடி கைகளைக் கழுவுங்கள், முகக்கவசம் அநாவசியமாக அகற்ற வேண்டாம், பொது இடங்களில் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்கவும், கண், மூக்கு, வாய் – அடிக்கடி தொட வேண்டாம், தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!