பிரித்தானியாவில் பரபரப்பு: பூட்டியிருந்த வீட்டில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த மனித உடல் பாகங்கள்!

பிரித்தானியாவில் பல நாட்களாக காலியாக இருக்கும் ஒரு வீட்டிற்குள், விசித்திரமாக ஒரு ஜாடிக்குள் மனித உடல் பாங்கங்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரத்தில், Toxteth பகுதியில் உள்ள Wordsworth தெருவில் பல ஆண்டுகளாக யாரும் குடிவறாமல் ஒரு விடு காலியாக இருந்தது.

இந்த நிலையில், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 9-ஆம் திகதி) அன்று, கட்டுமான பணியாளர்கள் அந்த வீட்டை சீர் செய்துகொண்டிருந்த போது, அங்கு ஒரு ஜாடிக்குள் மனித உடல் பாகங்கள் பதப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பிற்பகல் சுமார் 12.10 மணியளவில் அவர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து, பொலிஸார் அங்கு விரைந்தனர். அந்த வீட்டிற்குள் கிடைத்த மனித எச்சங்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டு நாட்களாக அந்த வீட்டில் பொலிஸார் தடயவியல் குழுவுடன் இணைந்து ஆய்வு நடத்திவருகின்றனர். மோப்ப நாய்களும் உதவிக்கு பயன்படுத்தப்பட்டன.

அந்த வீடு அமைந்துள்ள Wordsworth தெரு முழுக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வீட்டிற்கு அருகிலேயே டோக்ஸ்டெத் பார்க் கல்லறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!