மேலும் 155 பேர் கொரோனாவுக்குப் பலி!

நாட்டில் நேற்றுமுன்தினம் மேலும் 155 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 85 ஆண்களும் 70 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அதன்படி இதுவரை மொத்தமாக 5,775 பேர் நாட்டில் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை,நேற்று 3,142 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 348,260ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!