சினோபார்ம் தடுப்பூசியை விற்பனை செய்த லுனாவ வைத்தியசாலை சிற்றூழியர் கைது

சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்த லுனாவ வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சுகாதார அமைச்சின் புலனாய்வுப் பிரிவினர் நடாத்திய சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறிப்பிட்ட சில நபர்களிடம் பணம் பெற்று தடுப்பூசி அட்டைகளை தயாரித்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சந்தேக நபர் இன்று மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!