இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள். அம்பாந்தோட்டையில் சினோவாக் தடுப்பூசி தொழிற்சாலை!

அம்பாந்தோட்டையில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளை தயாரிக்கும் தொழிற்சாலையொன்று அமைக்கப்படவுள்ளது. சீனாவின் ஒரு மருந்து நிறுவனமொன்றினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் சீனாவும், இலங்கையும் தங்கள் இருதரப்பு “தடுப்பூசி இராஜதந்திரத்தை” விரிவுபடுத்தவுள்ளன. புதிய தொழிற்சாலை ஒரு உடன்படிக்கையின் கீழ் அமைக்கப்படும் என்று சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கொஹேன தெரிவித்தார்.

இலங்கையின் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீனாவின் சினோவாக் பயோடெக் ஆகியவற்றுக்கு இடையில் இந்த உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது.

இதன்படி அம்பாந்தோட்டையில் உள்ள பிரத்தியேக மருந்து உற்பத்தி மண்டலத்தில் அமைக்கப்படும் என்று இலங்கை தூதர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!