நேற்று 3,414 பேருக்கு கொரோனா தொற்று, 167 பேர் மரணம்!

நேற்று 3,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 359,591 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நேற்றுமுன்தினம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167ஆக பதிவாகி உள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,263ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை தெரிவிக்கின்றது.உயிரிழந்தவர்களில் 103 ஆண்களும், 64 பெண்களும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!