3 இலட்சம் முதியவர்கள் தடுப்பூசி போடவில்லை!

இலங்கையில் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்று மருந்து உற்பத்தி, வழங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி தினசரி உயிரிழப்போரில் பெரும்பாலானவர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

தற்போதைய கொவிட் தொற்று அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!