மேலும் 171 கொரோனா மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றுமுன்தினம் மேலும் 171 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை மொத்தமாக 6,434 பேர் நாட்டில் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

அவர்களில் 102 ஆண்களும் 69 பெண்களும் அடங்கியுள்ளனர். 30 வயதிற்கு கீழ் இரு ஆண்களும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 23 ஆண்களும் 12 பெண்களுமாக 35 பேரும், 60 வயதும் அதற்கு மேற்பட்டோரில் 77 ஆண்களும் 57 பெண்களுமாக 134 பேர் இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!