ஊரடங்கை மீறி நடமாடியவர்களுக்கு அன்டிஜன் சோதனை! – 7 பேருக்கு தொற்று உறுதி.

யாழ். மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடமாடிய 73 நபர்களுக்கு திடீர் அன்டிஜன் பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இ07 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர்கள் வீதிக் கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்களுக்கான அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் இன்றி வீடுகளில் இருக்குமாறு சுகாதார பரிசோதகர்களின் வேண்டுகோளினை புறக்கணித்துச் செயற்பட்டதன் காரணமாக இவ்வாறு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!