கொரோனாவுக்கே பலியானார் கௌரிசங்கரி – கணவர் தவராசாவும் மருத்துவமனையில்!

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளில் முன்னிலையாகி பலரின் விடுதலைக்கு முக்கிய பாரிய பங்களிப்பை வழங்கியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா, கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் அவரது துணைவியார் கௌரிஷங்கரி தவராசாவும், கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

துணைவியர் கௌரிஷங்கரி தவராசா, அவசர சிகிச்சைப் பிரிவிலும், சட்டத்தரணி தவராசா விடுதியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தனர்.

இந்த நிலையிலேயே கௌரிஷங்கரி நேற்று , சிகிச்சை பலனின்றி தனது 63 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.